மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
பெங்களூரை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் திருந்தவில்லை அங்கிருந்தபடியே, தொழிலதிபர்களை மிரட்டி 200 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி வழக்கில் சுகேஷுக்கு வெளியில் இருந்து உதவியதாக நடிகை ஜாக்குலின் பெர்ணாடஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பிறகு சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது. சுகேசும் ஜாக்குலின் எனது காதலிதான், ஆனால் அவருக்கும் மோசடிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
என்றாலும் அமலாக்கத்துறை ஜாக்குலினை பல கட்டமாக விசாரித்து குற்றவாளி பட்டியலில் இணைத்தது. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகை ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரிடம் அதிகளவில் பணம் இருப்பதால், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் என்று நீதிமன்றத்தில் கூறியது.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 50 ஆயிரத்துக்கான பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கான தனிநபர் உத்தரவாதமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.