டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பெங்களூரை சேர்ந்த பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகரன் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் அவர் திருந்தவில்லை அங்கிருந்தபடியே, தொழிலதிபர்களை மிரட்டி 200 கோடி பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி வழக்கில் சுகேஷுக்கு வெளியில் இருந்து உதவியதாக நடிகை ஜாக்குலின் பெர்ணாடஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பிறகு சுகேசும், ஜாக்குலினும் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியானது. சுகேசும் ஜாக்குலின் எனது காதலிதான், ஆனால் அவருக்கும் மோசடிக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.
என்றாலும் அமலாக்கத்துறை ஜாக்குலினை பல கட்டமாக விசாரித்து குற்றவாளி பட்டியலில் இணைத்தது. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகை ஜாக்குலின் மனுதாக்கல் செய்தார். அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவரிடம் அதிகளவில் பணம் இருப்பதால், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விடுவார் என்று நீதிமன்றத்தில் கூறியது.
அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜாக்குலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 50 ஆயிரத்துக்கான பிணைத்தொகை மற்றும் அதே தொகைக்கான தனிநபர் உத்தரவாதமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.