நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்திருக்கும் படம் கலகத் தலைவன். தடம், தடையறத் தாக்க, மீகாமன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். ஈஸ்வரன், பூமி படங்களில் நடித்த நிதி அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். பிக் பாஸ் ஆரவ் வில்லனாக நடித்துள்ளார், கலையரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, இயக்குனர்கள் மிஷ்கின், சுந்தர்.சி, ராஜேஷ்.எம், அருண்ராஜா காமராஜ், மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன், நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால், பாபிசிம்ஹா, உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரொம்பவே ஜாலியாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட நாளுக்குள் எடுத்தார். ஆனால் 3 வருடமாக அதனை செதுக்கி வருகிறார். நவம்பர் 18ம் தேதி வெளியீடு என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்னும் செதுக்கி கொண்டிருந்திருப்பார். செதுக்கிய வரை போதும் என்று ரிலீசுக்கு வந்து விட்டோம்.
இந்த படத்திற்காக என்னை விட அதிகமாக உழைத்தது கதை நாயகி நிதி அகர்வால்தான். என்னை விட அதிக காட்சிகளில் அவர்தான் நடித்திருக்கிறார். இனி அவர் தமிழ் படங்களில் நடிப்பாரா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அடி உதையெல்லாம் வாங்கி நடித்திருக்கிறார். நான்தான் சினிமாவை தாங்கி கொண்டிருக்கிற மாதிரி எல்லோரும் நடிப்பை விட்டு விடாதீர்கள் என்று வலியுறுத்துகிறார்கள். நான் இப்போதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். நான் நடித்த படங்களின் இரண்டாம் பாகத்தில் நடியுங்கள் என்கிறார்கள். ஆனால் எனக்கு வேறு வேலைகள் நிறைய இருக்கிறது. அதனால் மாமன்னன் படத்தை முடித்துவிட்டு செல்போன் நம்பரை மாற்றிவிட்டு எஸ்கேப் ஆகப்போகிறேன். இவ்வாறு பேசினார் உதயநிதி ஸ்டாலின்.