'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சந்தானம் நடித்து முடித்துள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கி உள்ளார். ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் இது. ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், முனிஷ்காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்உள்ளனர். லேபிரிந்த் பிலிம்ஸ் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் மனோஜ் பீதா கூறியதாவது: இது தெலுங்கு படத்தின் ரீமேக்தான் என்றாலும் பல மாற்றங்களை செய்திருக்கிறேன். இது சந்தானம் நடிக்கும் வழக்கமான காமெடி படம் அல்ல. அவரது பன்ஞ் டயலாக்கோ, டைமிங் டயலாக்கோ இருக்காது. கதாநாயகி இருந்தாலும் காதலோ, ரொமான்சோ இருக்காது.
சந்தானத்தை இதுவரை பார்க்காத கோணத்தில் காட்ட முயற்சித்திருக்கிறோம். இந்த படத்தில் அவர் ஏஜெண்ட் கண்ணாயிரமாகத்தான் தெரிவாரே தவிர சந்தானமாக தெரிய மாட்டார். இது மத ரீதியான ஒரு பிரச்னையை பற்றி துப்பறிகிற கதை. ஆனால் எந்த மதத்தையும் குறிப்பிட்டு படத்தை எடுக்கவில்லை. இதனூடே ஒரு தாய்க்கும், மகனுக்குமான பிணைப்பையும் படம் சொல்லும். காமெடி, ஆக்ஷன் போன்றவை கதைக்கு ஏற்றபடி ஆங்காங்கே இருக்கும். இந்த படம் சந்தானத்தின் கேரியரில் முக்கியமான படமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.