ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஒரு நபர் மூலமாக சைபர் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளார் நிதி அகர்வால்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் தற்போது அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார் நிதி அகர்வால். அந்த புகாரில் அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட அந்த நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக தரக்குறைவான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதோடு அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ஹனிரோஸ், இப்படி தன் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.