ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

தமிழில் சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். தெலுங்கில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ராஜா சாப் மற்றும் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஒரு நபர் மூலமாக சைபர் தாக்குதலுக்கு ஆளாகி வந்துள்ளார் நிதி அகர்வால்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையில் தற்போது அந்த நபர் மீது புகார் அளித்துள்ளார் நிதி அகர்வால். அந்த புகாரில் அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட அந்த நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக தரக்குறைவான மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளதோடு அதற்கான ஆதாரங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தான் மலையாள நடிகை ஹனிரோஸ், இப்படி தன் மீது சைபர் தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.