நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013ல் உருவான படம் மத கஜ ராஜா. ஜெமினி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப்படம் சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளியாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக வரும் ஜன., 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக அஞ்சலி, வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடியனாக நடித்து வந்த சந்தானம் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சுந்தர்.சியுடன் இணைந்து இருந்தார்.
அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்கிற தகவலை சமீபத்தில் இயக்குனர் சுந்தர்.சி பகிர்ந்து கொண்டார். 2021ல் வெளியான அரண்மனை 3 படத்தில் தான் முதன்முறையாக சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்போது 2012-லேயே சுந்தர்.சி இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான செய்திதான்.
அதற்கு முந்தைய வருடம்தான் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்த அவன் இவன் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பின் காரணமாக மத கஜ ராஜாவிலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆர்யாவை விஷால் அழைத்து வந்து விட்டார் என்று தெரிகிறது. இதே போல ஆர்யாவும், சந்தானமும் இணைந்து நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்கிற படத்தில் கெஸ்ட் ரோலில் விஷால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.