'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவும், மற்ற தென்னிந்திய மொழி சினிமாவும் அவ்வப்போது கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்களை வெளியிட்டு வருகின்றது. பெண்களை மையப்படுத்திய அந்தப் படங்கள் சிறந்த படங்களாக அமைந்துவிட்டால் அதற்கான வரவேற்பும் கதாநாயகர்களின் படங்கள் அளவுக்கு இருக்கிறது.
இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா' படமும் வெளியாகிறது. இரண்டு படங்களிலும் கதாநாயகிகளின் போராட்டம்தான் படத்தின் மையக்கருவாக இருக்கிறது.
'யசோதா' படத்தில் சமந்தா, வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் நடித்துளளதாகத் தெரிகிறது. 'டிரைவர் ஜமுனா' கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பெண் டாக்சி டிரைவராக நடித்திருக்கிறார். இவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள்தான் இந்தப் படங்களின் கதை. பெண்களை முன்னிலைப்படுத்தும் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளிவருவது ஆச்சரியம்தான்.
அந்தப் படங்களோடு நவம்பர் 11ம் தேதியன்று 'மிரள், பரோல், திருமாயி' ஆகிய படங்களும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.