தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் | ஜெயிலர் வெளியான அதே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் ஜெயிலர் 2 | சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா? | துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி |

எப்.ஐ.ஆர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் ‛கட்டா குஸ்தி'. இதனை அவரே தயாரித்தும் உள்ளார். இணை தயாரிப்பாளராக தெலுங்கு நடிகர் ரவிதேஜா இணைந்துள்ளார். படம் தெலுங்கிலும் வெளிவருகிறது. விஷ்ணு விஷால் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கி உள்ளார். விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது: மல்யுத்தம் போன்றதுதான் கட்டா குஸ்தி. மணல் வெளியில் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் விளையாட்டு. தமிழ்நாட்டில் சேலம், கோவை, பொள்ளாச்சி பகுதியில் இன்னும் இந்த விளையாட்டுகள் நடந்து வருகிறது. இந்த விளையாட்டின் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. ஆனாலும் இது விளையாட்டு படம் அல்ல. கணவன் மனைவிக்கு இடையிலான ஈகோவை காமெடியாக சொல்லும் படம்.
இந்த படத்தின் கதை 2 ஆண்டுகளுக்கு முன்பே தயாராகி விட்டது. சில தயாரிப்பாளர்கள் கதை கேட்டுவிட்டு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்ற தயங்கினர். அதனால் தான் நானே தயாரிக்க முடிவு செய்தேன். படத்தின் கதையை கேட்டுவிட்டு ரவிதேஜாவும் இணைந்து கொண்டார். அவரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கேட்டோம். இது விஷ்ணு விஷால் படமாக மட்டும் இருக்கட்டும் என்று மறுத்து விட்டார். அடுத்து நேரடி தெலுங்கு படத்தில் அவரும் நானும் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறது.
என் மனைவிக்கு நான் தெலுங்கில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அவரது முயற்சியால்தான் இதுவெல்லாம் நடக்கிறது. இதற்காக தெலுங்கு கற்று வருகிறேன். இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.




