முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் | 20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் |
'கேஜிஎப் 2' படத்தை அடுத்து கன்னட சினிமாவான 'காந்தாரா' படம் ஒரு மாதத்தைக் கடந்தும் பான் இந்தியா படமாக வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படத்தின் வசூல் 200 கோடியைத் தாண்டிவிட்டது.
கடந்த வாரம் ஹிந்தியில் வெளியான பெரிய நடிகர்களான அக்ஷய்குமார் நடித்த 'ராம் சேது', அஜய் தேவகன் நடித்த 'தாங்க் காட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. தற்போது அந்தப் படங்களைத் தூக்கிவிட்டு மீண்டும் 'காந்தாரா' படத்தைத் திரையிட்டுள்ளார்களாம்.
தமிழகத்திலும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “காந்தாரா' படத்தின் வெற்றி அதுவாக நடந்தது. நமது கலாச்சாரம், நாட்டுப்புறவியல் ஆகியவற்றை படத்தில் கொடுத்திருந்தேன். சினிமா என்பது ஒரு எனர்ஜி. கடவுள் அருளால் இந்தப் படம் பான் இந்தியா அளவில் வெளியாகி உள்ளது. இப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படம் என பலரும் கருத்து தெரிவித்து வருவதைப் பார்த்தேன். அது எனக்கு மகிழ்ச்சிதான், ஆனால், அது பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் வெற்றிக்காக உழைக்கவில்லை, வேலைக்காக உழைக்கிறேன், அவ்வளவுதான்,” எனத் தெரிவித்துள்ளார்.
'காந்தாரா' படம் 300 கோடி வசூலைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.