'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! |
கன்னடத்தில் உருவாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 2022ல் வெளியான ‛காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாகவும் நடித்தார். நாயகியாக சப்தமி கவுடா நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' உருவாகி வருகிறது. அதாவது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலமாதங்களாக நடந்து வருகிறது. இப்படம் வரும் அக்., 2ம் தேதி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றும், ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாகவும் வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக ரிஷப் ஷெட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சரியாக செல்கிறது. எங்களை நம்புங்கள், வதந்திகளை நம்பாதீர். சொன்னபடி அக்., 2ல் படம் வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.