மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
கர்நாடகாவில் அரசு சார்பில் தயாராகி வரும் பிரபலமான மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக தற்போது நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு வருடத்திற்கான தூதராக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இதற்காக அவருக்கு 6.2 கோடி தொகை ஊதியமாக பேசப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் பல கன்னட அமைப்புகள், மைசூர் சாண்டல் சோப் தூதராக நியமிக்க கன்னடத்திலேயே தகுதியான நடிகர்கள் இல்லையா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளன. இப்படி எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து கர்நாடக வணிகவரி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி பாட்டில் அவர்களை சாந்தப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம் கன்னட திரையுலகின் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டுள்ளது. நம் கன்னட திரைப்படங்கள் பாலிவுட் படங்களுக்கே சவால் விடும் விதமாக உருவாகி வருகின்றன. மைசூர் சாண்டல் கர்நாடகா அளவில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று வலுவாக இருக்கிறது. அதேசமயம் இதை கர்நாடகாவையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கொண்டு சேர்த்து வலுப்படுத்தும் விதமாகத்தான் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது வியாபாரத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவின் மூலமாக தீர்மானிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே தவிர தன்னிச்சையான முடிவு அல்ல. கர்நாடகாவின் பெருமை என்பது இந்த நாட்டின் ஒரு ஆபரணம் போன்றது” என்று கூறியுள்ளார்.