லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
சமீப வருடங்களாக கன்னட சினிமா தமிழ் மற்றும் தெலுங்கு, ஏன் மலையாள படங்களுக்கு கூட சவால் விடும் வகையில் மிக அருமையான கதைகளுடனும் கமர்ஷியலாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. கேஜிஎப்-2 மூலமாக ஹிந்தி சினிமாவில் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அந்த வகையில் கன்னட இளம் நடிகர்கள் சிலர் பான் இந்தியா நடிகர்களாக மாறி வருகின்றனர். இந்தநிலையில் கன்னட சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமாரும் கன்னட எல்லையை தாண்டி பான் இந்தியா நடிகராக மாற விரும்புகிறார். அந்த வகையில் தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடனும் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்தநிலையில் கன்னடத்தில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளியாகும் விதமாக உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார். இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழில் தற்போது விக்ரம் பிரபு, வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‛பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ள படத்தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார், கார்த்திக் அத்வைத் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளது.