வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்த பின் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தனுஷ் ஜோடியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மாறன்' படத்திலும் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்திருப்பவர் மாளவிகா. ஆனாலும், அவருக்கு அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் வராமல் இருந்தது. இப்போது இரண்டு முக்கிய படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று தமிழ், மற்றொன்று தெலுங்கு.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'தங்கலான்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் மாளவிகா. மற்றொரு கதாநாயகியாக பார்வதி நடிக்கிறார். தெலுங்கில் மாருதி இயக்த்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் மாளவிகா. மற்றொரு கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இன்றி கடந்த பத்து நாட்களாக நடந்து வருவதாகத் தகவல். தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய படங்களில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க உள்ளார் மாளவிகா மோகனன்.