கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
காட்பாதர் படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்திற்கு 'வால்டர் வீரய்யா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சிரஞ்சீவியின் 154வது படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோனா வெங்கட் மற்றும் கே.சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.