இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

காட்பாதர் படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்திற்கு 'வால்டர் வீரய்யா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சிரஞ்சீவியின் 154வது படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோனா வெங்கட் மற்றும் கே.சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.