அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ், டிரஷ்சர் ஹண்டர் பாணியிலான புதையலை தேடிச் செல்லும் அட்வென்ஜர் படமாக உருவாகிறது. இதன் கதையை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை எழுதியவருமான விஜயேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார்.
இந்த படமும் 500 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபிகா ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் அறிந்த நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து அது இறுதிகட்டத்தையும் அடைந்துள்ளது. இதுவல்லாமல் ஒரு முக்கியமான ஹாலிவுட் நடிகர், நடிகையும் நடிக்க இருக்கிறார்கள்.
தீபிகா தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.