ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ், டிரஷ்சர் ஹண்டர் பாணியிலான புதையலை தேடிச் செல்லும் அட்வென்ஜர் படமாக உருவாகிறது. இதன் கதையை ராஜமவுலியின் தந்தையும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படத்தின் கதையை எழுதியவருமான விஜயேந்திர பிரசாத் எழுதி இருக்கிறார்.
இந்த படமும் 500 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தீபிகா ஹாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் அறிந்த நடிகையாக இருப்பதால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து அது இறுதிகட்டத்தையும் அடைந்துள்ளது. இதுவல்லாமல் ஒரு முக்கியமான ஹாலிவுட் நடிகர், நடிகையும் நடிக்க இருக்கிறார்கள்.
தீபிகா தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக நாக் அஸ்வின் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.