கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமா உலகமும், தெலுங்கு சினிமா உலகமும் பல வருட இடைவெளிக்குப் பிறகு ஒன்றுக்கொன்று நெருங்கி வர ஆரம்பித்துள்ளன. 30 வருடங்களுக்கு முன்பு தெலுங்குத் திரைப்பட உலகம் சென்னையில்தான் இயங்கி வந்தது. பல முன்னணி தெலுங்கு நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் அனைவருக்கும் சென்னையில் வீடுகள் இருந்தது. இப்போதும் ஒரு சிலர் அவற்றை விற்காமல் அப்படியே வைத்திருக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான என்.டி.ராமராவ் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வரான பிறகு தெலுங்குத் திரையுலகத்தை அப்போதைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்திற்குக் கொண்டு சென்றார். அதற்காக பல சலுகைகளை அறிவித்தார். பின்னர் அங்கு பல ஸ்டுடியோக்கள் உருவாகி தெலுங்கு சினிமா உலகம் முற்றிலுமாக ஐதராபாத்திற்கே மாறியது. இப்போது பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது.
தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியும், தமிழிலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆகியும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தற்போது சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் நேரடியாக தமிழ்ப் படங்களைத் தயாரிக்கவும், சில தெலுங்கு இயக்குனர்கள் தமிழ்ப் படங்களை இயக்கவும் ஆரம்பித்துள்ளார்கள்.
விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தைத் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் தயாரிக்கிறார். தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் தயாரிக்கிறார். மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளன.
அவற்றிற்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடிக்க தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கியுள்ள 'ப்ரின்ஸ்' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வரவேற்பு விஜய், தனுஷை வைத்து படங்களை இயக்கியுள்ள வம்சி, வெங்கி ஆகியோருக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். அதற்கு முன்னோட்டமாக 'ப்ரின்ஸ்' படம் மூலம் அனுதீப் வெற்றியைப் பறிப்பாரா என்று தெலுங்குத் திரையுலகத்தினரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.