ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இப்படத்தின் முதல் பாகம்தான் கடந்த வருடம் வெளிவந்தது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கூட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. தமிழில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது. ஆனால், படத்தின் இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமா எடுக்கத் திட்டமிட்டதால் கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதியதாக சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“'புஷ்பா த ரூல்' படத்தின் வேலைகள் முழு மூச்சுடன் நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், பிரபலங்களின் போட்டோகிராபர் அவினாஷ் கவுரிக்கர், டிசைனர் டியூனி ஜான் மற்றும் மொத்த குழுவினரும் சிறப்பானவற்றைக் கொடுக்க தங்கள் முயற்சிகளில் உள்ளார்கள்,” என படத்தின் போட்டோ ஷுட் நடப்பது பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்கள்.