என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் சினிமா உலகில் இப்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் அதிகமான ரசிகர்களைக் கொண்டவர்களில் விஜய், அஜித்திற்கு இடையேதான் போட்டி நிலவி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் இருவரின் ரசிகர்கள்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால், தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக பைனான்சியராக, தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக உள்ள மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியன் நேற்று நடைபெற்ற 'பிரின்ஸ்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்த சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் பேசியிருக்கிறார்.
“தமிழ் சினிமாவுல எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோவா ஒரு சிலர்தான் இருப்பாங்க. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் ஐயா இருந்தாரு, அதற்கடுத்து ரஜினி சார், அதற்கடுத்து விஜய் சார், அந்த வரிசையில இப்ப சிவகார்த்திகேயன் அனைத்து தரப்பினரும் பிடித்த ஹீரோவா இருக்காரு,” என்று பேசினார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனும் நன்றி என்பதை கைகூப்பி அவருக்கு வணக்கமாய் தெரிவித்தார்.
ரஜினிகாந்த், விஜய் இருவரும் இன்னமும் டாப் வசூல் நடிகர்களாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கடுத்து சிவகார்த்திகேயனை அன்புச் செழியன் சேர்த்துப் பேசியது மற்ற ஹீரோக்களின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் ஆகியோர் அந்த இடத்தில் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்றே கோலிவுட்டிலும் கிசுகிசுக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டாக்டர், டான்' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் 'பிரின்ஸ்' படமும் இடம் பிடித்தால் அவரது மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும். சிவகார்த்திகேயன் தற்போது 'அயலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.