மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"நீ தானே என் பொன் வசந்தம் படத்துக்கு பின், தமிழில் புதிய படங்கள் இல்லையென்ற போதும், தெலுங்கில் பல படங்களை கைப்பற்றி, பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. இதற்கிடையில் "பாலிவுட்டிலிருந்து படங்கள் வந்தபோதும், மிதமான கிளாமர் என்ற பாலிசியை கடைபிடித்து வரும் எனக்கு, இந்தி சினிமா சரிபட்டு வராது என்று தவிர்த்து விட்ட சமந்தா, "அடுத்து தமிழ்,தெலுங்கு என, இரண்டு மொழிப் படங்களையும், இரண்டு கண்களாக பாவித்து நடிக்கப்போகிறேன் என்றும் கூறி யுள்ளார். "காரணம், இந்த இரண்டு மொழியிலுமே, என்னை ஒரு நடிகையாக கருதாமல், தங்கள் வீட்டு பிள்ளை போன்றே அன்பு காட்டுகின்றனர். சமந்தா என்ற பெயரை சுருக்கி, சாம் என்றே செல்லப்பெயர் வைத்து அழைக்கின்றனர். அதோடு, எந்த நடிகைகளும் என்னை போட்டியாக நினைக்காமல், சக தோழியாகவே பழகுகின்றனர். என்றென்றும், இந்த அன்புக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என்கிறார் சமந்தா.