ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

'புஷ்பா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளிவந்த பின் தமிழிலும் பாப்புலர் ஆகிவிடுவார். தெலுங்கில் தன்னுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலிப்பதாக இதற்கு முன் பல செய்திகள் வந்தன. ஆனால், இருவருமே மறுத்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பையிலிருந்து மாலத்தீவிற்கு விடுமுறைக்காகச் சென்றதாக செய்திகள் வந்தன. இருவரும் அங்கு ஒன்றாக தங்கியுள்ளார்கள் என்பதற்கு இன்னும் எந்த புகைப்பட ஆதாரமும் வெளியாகவில்லை. மாலத் தீவிலிருந்து ராஷ்மிகா மட்டுமே புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். ஆனால், விஜய் தேவரகொண்டா எந்த ஒரு புகைப்படத்தையும் பகிரவில்லை. இருப்பினும் ராஷ்மிகா சில புகைப்படங்களில் அணிந்துள்ள கூலிங் கண்ணாடி அவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியுள்ளார்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துள்ளது. ராஷ்மிகா அதை வேண்டுமென்றேதான் அணிந்துள்ளார் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
மும்பை ஏர்போர்ட்டில் விஜய் தேவரகொண்டா கிளம்பிய போது அந்த கூலிங் கண்ணாடியைத்தான் அணிந்திருந்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு அவர்கள் காதலர்கள்தான் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருவதால் தனது காதலைப் பற்றி சொல்லத் தயங்குகிறார் என்று தெரிகிறது.




