பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'புஷ்பா' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளிவந்த பின் தமிழிலும் பாப்புலர் ஆகிவிடுவார். தெலுங்கில் தன்னுடன் இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலிப்பதாக இதற்கு முன் பல செய்திகள் வந்தன. ஆனால், இருவருமே மறுத்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இருவரும் மும்பையிலிருந்து மாலத்தீவிற்கு விடுமுறைக்காகச் சென்றதாக செய்திகள் வந்தன. இருவரும் அங்கு ஒன்றாக தங்கியுள்ளார்கள் என்பதற்கு இன்னும் எந்த புகைப்பட ஆதாரமும் வெளியாகவில்லை. மாலத் தீவிலிருந்து ராஷ்மிகா மட்டுமே புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். ஆனால், விஜய் தேவரகொண்டா எந்த ஒரு புகைப்படத்தையும் பகிரவில்லை. இருப்பினும் ராஷ்மிகா சில புகைப்படங்களில் அணிந்துள்ள கூலிங் கண்ணாடி அவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியுள்ளார்கள் என்பதைக் காட்டிக் கொடுத்துள்ளது. ராஷ்மிகா அதை வேண்டுமென்றேதான் அணிந்துள்ளார் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
மும்பை ஏர்போர்ட்டில் விஜய் தேவரகொண்டா கிளம்பிய போது அந்த கூலிங் கண்ணாடியைத்தான் அணிந்திருந்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு அவர்கள் காதலர்கள்தான் என கமெண்ட் அடித்து வருகிறார்கள். ராஷ்மிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருவதால் தனது காதலைப் பற்றி சொல்லத் தயங்குகிறார் என்று தெரிகிறது.