தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வருகிற 29ம் தேதியே திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படத்தையும் வெளியிடுவது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் எஸ். தாணு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியிடவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே முடிவு செய்து விட்டேன். அதோடு இந்த முறை 9 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பினை தவறவிட நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் தாணு. மேலும், இதற்கு முன்பு நான் தயாரித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடவில்லை. காலை எட்டு மணிக்குதான் முதல் காட்சி திரையிட்டோம். காரணம் அந்த காட்சியில்தான் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க முடியும். அதனால் தான் நானே வருவேன் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.