ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு | வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா |
மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வருகிற 29ம் தேதியே திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படத்தையும் வெளியிடுவது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் எஸ். தாணு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியிடவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே முடிவு செய்து விட்டேன். அதோடு இந்த முறை 9 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பினை தவறவிட நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் தாணு. மேலும், இதற்கு முன்பு நான் தயாரித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடவில்லை. காலை எட்டு மணிக்குதான் முதல் காட்சி திரையிட்டோம். காரணம் அந்த காட்சியில்தான் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க முடியும். அதனால் தான் நானே வருவேன் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.