பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வருகிற 29ம் தேதியே திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படத்தையும் வெளியிடுவது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் எஸ். தாணு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியிடவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே முடிவு செய்து விட்டேன். அதோடு இந்த முறை 9 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பினை தவறவிட நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் தாணு. மேலும், இதற்கு முன்பு நான் தயாரித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடவில்லை. காலை எட்டு மணிக்குதான் முதல் காட்சி திரையிட்டோம். காரணம் அந்த காட்சியில்தான் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க முடியும். அதனால் தான் நானே வருவேன் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.