எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் |
மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வருகிற 29ம் தேதியே திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் படத்தையும் வெளியிடுவது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் எஸ். தாணு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நானே வருவேன் படத்தை பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியிடவில்லை. செப்டம்பர் இறுதியில் வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் மாதமே முடிவு செய்து விட்டேன். அதோடு இந்த முறை 9 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் இந்த வாய்ப்பினை தவறவிட நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் தாணு. மேலும், இதற்கு முன்பு நான் தயாரித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு அதிகாலை காட்சிகள் போடவில்லை. காலை எட்டு மணிக்குதான் முதல் காட்சி திரையிட்டோம். காரணம் அந்த காட்சியில்தான் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க முடியும். அதனால் தான் நானே வருவேன் படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.