நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், இந்த வாரம் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
சென்னையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இசை வெளியீட்டு நிகழ்விற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளியை விட்டார்கள். அதன்பின் திருவனந்தபுரம், பெங்களூரூ, ஐதராபாத், மும்பை, டில்லி ஆகிய ஊர்களுக்குச் சென்று படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்கள். அனைத்து ஊர்களுக்கும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா கண்டிப்பாக இருந்தார்கள். இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, சரத்குமார் ஆகியோர் சில இடங்களில் மட்டும் கலந்து கொண்டார்கள்.
படக்குழுவின் சுற்றுப் பயணத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகின. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகாலை காட்சிகள் உட்பட வார இறுதி நாட்கள் வரையிலும் பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வெளிநாடுகளிலும் குறிப்பாக அமெரிக்காவில் படத்திற்கான முன்பதிவு சிறப்பாக உள்ளதாக படத்தை வெளியிடும் வினியோக நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் நாள் வசூலில் இப்படம் புதிய சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.