ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள் பிறந்து பல வருட குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் தங்களது பிரிவைப் பற்றி அறிவித்தனர். ஆனாலும், சமீபத்தில் தங்களது மூத்த மகனின் பள்ளி நிகழ்ச்சிக்கு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா முதல் கணவரை விட்டுப் பிரிந்த பிறகு நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததைப் பற்றியும், குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கையில் குழந்தையுடனும், பின்னால் அப்பா ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, “என்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டில் கடவுள் எனக்குக் கொடுத்த சிறந்த பரிசு, எனது வீர் பாப்பா. எனக்குப் பின்னால் கடவுளின் இந்த அற்புத குழந்தை எப்போதும் இருப்பது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.