வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்கள் பிறந்து பல வருட குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு அவர்கள் தங்களது பிரிவைப் பற்றி அறிவித்தனர். ஆனாலும், சமீபத்தில் தங்களது மூத்த மகனின் பள்ளி நிகழ்ச்சிக்கு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா முதல் கணவரை விட்டுப் பிரிந்த பிறகு நடிகரும், தொழிலதிபருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பத்து நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததைப் பற்றியும், குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கையில் குழந்தையுடனும், பின்னால் அப்பா ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, “என்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டில் கடவுள் எனக்குக் கொடுத்த சிறந்த பரிசு, எனது வீர் பாப்பா. எனக்குப் பின்னால் கடவுளின் இந்த அற்புத குழந்தை எப்போதும் இருப்பது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.