'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

தென்னிந்திய அளவில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் சேர்த்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்யாராய் உட்பட பல மொழி திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு மொழியிலும் வெளியாக உள்ள இந்த படத்திற்காக அந்த மொழிகளை சேர்ந்த பிரபல ஹீரோக்கள் டிரைலர் மற்றும் படத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில் இந்த படத்தின் மலையாள டிரைலருக்கு நடிகர் பிரித்விராஜ் குரல் கொடுத்திருந்தார். இதன் மலையாள வெர்சனில் படம் ஆரம்பிக்கும்போது இதன் கதையை சொல்லி படத்தை துவங்கி வைக்கும் விதமாக குரல் கொடுத்து இருக்கிறார் நடிகர் மம்முட்டி. கேரளாவில் நேற்று நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின்போது இந்த விஷயத்தை கூறி இந்த இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் மம்முட்டியும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் பிரித்விராஜும் நடித்திருந்தனர். அந்த நட்புக்காக தற்போது இவர்கள் இருவரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு குரல் கொடுத்துள்ளனர்.