வெப் தொடரில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'ஓஜி' படத்திற்கான கட்டண உயர்வு: நீதிமன்றம் தடை | ரவி மோகனுக்கு அடுத்த நெருக்கடி : வீட்டு முன் ஜப்தி நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள் | புரமோஷனுக்காக டிரைவராக மாறிய இசையமைப்பாளர் தமன் | ரசிகையை அவமதித்தேனா? : நடிகர் ஷேன் நிகம் விளக்கம் | மறைந்த தாயார் ஸ்ரீதேவி அணிந்த நீல நிற சேலையில் கவனம் பெற்ற ஜான்வி கபூர்! | காய்ச்சல் காரணமாக ஓஜி புரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்த பவன் கல்யாண் | தான் இறந்து விட்டதாக வதந்தி! பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்!! | செக் மோசடி வழக்கிலிருந்து ராம்கோபால் வர்மாவை விடுவித்த நீதிமன்றம் | 'காந்தாரா சாப்டர்-1' பட விழாவில் கண்ணீர் விட்ட ருக்மணி வசந்த்! |
மலையாளத்தில் வெளியான நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இந்த படம் கடந்த ஓணம் பண்டிகை அன்றே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓணம் பண்டிகைக்கு சற்று முன்னதாக, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், இந்த படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்றும், ஓணம் பண்டிகைக்கு அடுத்த வாரமே இந்த படம் வெளியாகும் என்றும் ரசிகர்களிடம் சமாதானம் கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இதை நினைவூட்டி படம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து அவரிடம் சோசியல் மீடியாவில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
அப்படி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், “இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பணிகளே பாக்கி இருக்கின்றன. அவை முடிந்ததும் உடனடியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் அரைகுறையாக வெந்த பலகாரத்தை சாப்பிட யாரும் விரும்ப மாட்டார்கள். நல்லபடியாக வெந்தபின் தரவேண்டும் என்பதே சமையர்காரனாகிய என் விருப்பம்.. ஏற்கனவே ஒரு தேதியை அறிவித்து அதில் படத்தை ரிலீஸ் செய்யாததற்கு மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.