பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
மலையாளத்தில் வெளியான நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக பிரேமம் படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்ட் என்கிற படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இந்த படம் கடந்த ஓணம் பண்டிகை அன்றே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஓணம் பண்டிகைக்கு சற்று முன்னதாக, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், இந்த படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்றும், ஓணம் பண்டிகைக்கு அடுத்த வாரமே இந்த படம் வெளியாகும் என்றும் ரசிகர்களிடம் சமாதானம் கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இதை நினைவூட்டி படம் எப்போது வெளியாகும் என தொடர்ந்து அவரிடம் சோசியல் மீடியாவில் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
அப்படி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், “இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பணிகளே பாக்கி இருக்கின்றன. அவை முடிந்ததும் உடனடியாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் அரைகுறையாக வெந்த பலகாரத்தை சாப்பிட யாரும் விரும்ப மாட்டார்கள். நல்லபடியாக வெந்தபின் தரவேண்டும் என்பதே சமையர்காரனாகிய என் விருப்பம்.. ஏற்கனவே ஒரு தேதியை அறிவித்து அதில் படத்தை ரிலீஸ் செய்யாததற்கு மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.