20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகர் பிரபாஸின் பெரியப்பாவுமான கிருஷ்ணம் ராஜு சமீபத்தில் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்களும் மொழி பாகுபாடு இல்லாமல் அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து மம்முட்டி உள்ளிட்ட பலபேர் அவருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் கிருஷ்ணம் ராஜுவின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லையே என்று தனது வருத்தத்தை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ரிபெல் ஹீரோ கிருஷ்ணம் ராஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். அவர் தன்னுடைய சொந்த குழந்தைகள் போலவே ஒவ்வொருவரையும் அக்கறை எடுத்து கவனிப்பார். அதுமட்டுமல்ல ஒரு தாயைப்போல தானே அருகில் இருந்து உணவு பரிமாறுவார். அந்த அன்பையும் கவனிப்பையும் நான் மிஸ் பண்ணுகிறேன். என்னுடைய துரதிர்ஷ்டம் நான் அவருடைய உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தூரத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடைய அந்த பெருமை பிரபாஸ் மூலமாக எப்போதுமே உயிருடன் இருக்கும்” என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸ் தெலுங்கில் பிசியாக இருந்த சமயத்தில் பிரபாஸை வைத்து ரிபெல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.