திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

அமைதிப்படை 2, கண்களும் கவி பாடுதே தற்போது உருவாகி வரும் பிஸ்தா, மணியார் குடும்பம் ஆகிய படங்களில் நடித்து வருபவர் மலையாள நடிகை மிருதுளா முரளி. தற்போது தெருநாய்கள் குறித்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மிருதுளா. சமீபத்தில் கேரள அரசு தெருவில் திரியும் வெறி பிடித்த நாய்களை கொல்வதற்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கும் செய்தி வெளியானது.
இதை கேள்விப்பட்டதும் கொந்தளித்துப்போன மிருதுளா முரளி, “பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரையும் கொன்று விடுகிறோமா என்ன? அவர்களுக்கு ஜெயில் என்கிற ஒரு இடத்தை கொடுத்து பாதுகாக்க தானே செய்கிறோம். அதேபோன்று இந்த வாயில்லா பிராணிகளை எதற்காக கொல்ல வேண்டும்? அவைகளுக்கு என தனியாக ஒரு தங்குமிடத்தை ஒதுக்கி அவற்றை பராமரிப்பதை விட்டுவிட்டு, கொல்வதற்காக அனுமதி கேட்பது மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்துள்ளார். மிருதுளாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.




