ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில் நாக சைதன்யாவை பிரியப் போவதாக சமந்தா கூறிய போது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் அதை தன்னால் தடுக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சமந்தாவும். நாக சைதன்யாவும் எனக்கு ஒன்றுதான். இப்போது வரை அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்ந்து நட்பில் இருந்து வருகிறேன். விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சமந்தா- நாகசைதன்யா திருமண புகைப்படங்களையும் பகிர்ந்து, நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கதை இருந்தது. ஆனால் இனி எப்போதும் அது இல்லை. அதனால் ஒரு புதிய கதை புதிய அத்தியாயத்தை துவங்குவோம். உங்கள் அனைவரின் உணர்வுக்கும் நன்றி. அந்த பிரச்சினைகளில் இருந்து நான் வெளிவர நீண்ட காலம் ஆகிவிட்டது. வாழ்க்கை மிகவும் குறுகியது என்று அந்த பதிவில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு தெரிவித்துள்ளார் .