பிளாஷ்பேக்: ஒரே இரவில் கதை எழுதி உருவாக்கப்பட்ட “ஓர் இரவு” திரைப்படம் | 'வணங்கான்' படத்தில் 'மிஸ்' ஆன வாய்ப்பு, இப்போது சூர்யா 46ல்… | விஷால், சாய் தன்ஷிகா வயது வித்தியாசத்தை ஆராயும் ரசிகர்கள்!! | ராஜமவுலி பாராட்டும், 'டூரிஸ்ட் பேமிலி' இயக்குனரின் மகிழ்ச்சியும் | என்னாச்சு கேர்ள் பிரண்டுக்கு? : ரசிகர்களை அமைதிப்படுத்திய ராஷ்மிகா | கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் சேலை கட்டி அசத்திய கன்னட நடிகை | ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர் பட ரீ ரிலீஸில் அதிர்ச்சி : பாதியில் வெளியேறிய ரசிகர்கள் | மாமனிதர் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி : விஜய் சேதுபதி | தொடரும் பட இயக்குனரை வீட்டுக்கே வரவழைத்து பாராட்டிய சூர்யா, கார்த்தி | 'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா |
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி திரைக்கு வந்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நஷ்டமடையலாம் என விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. அப்போது ஒரு ரசிகர் அவரிடத்தில், கோப்ரா படம் தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்த போது, வருத்தம் தெரிவித்த அஜய் ஞானமுத்து, அடுத்து உங்களை திருப்திப்படுத்தும் வகையில் படங்கள் இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து இன்னொரு ரசிகர் கோப்ரா படத்தின் கதையே புரியவில்லை என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அஜய் ஞானமுத்து, குழப்பமான கதை அம்சம் கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதால் அதுபோன்ற கதையில் இந்த படத்தை எடுத்தேன். ஆனபோதிலும் நீங்கள் கோப்ரா படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தால் கண்டிப்பாக படத்தின் கதை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என அவருக்கு பதில் கொடுத்துள்ளார்.