மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
மண்டேலா, கூர்கா உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்த யோகிபாபு தற்போது கதையின் நாயகனாக நடிக்கும் படம் யானை முகத்தான். இந்த படத்தின் மூலம் மலையாள இயக்குநரான ரெஜிஷ் மிதிலா, தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், குளப்புள்ளி லீலா, நாகவிஷால் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், பரத் சங்கர் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ரெஜிஷ் மிதிலா கூறியதாவது: இந்த படத்தில் யோகி பாபு, கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கி விடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார். ரமேஷ் திலக் வாங்கும் கடன்களுக்கு யோகி பாபு பொறுப்பேற்று எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படம். என்றார்.