மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறவர் ஜெயலட்சுமி. கடந்த மாதம் இவர் மீது பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில் ஜெயலட்சுமி நான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலட்சுமி அளித்த பதில் புகாரில், சினேகம் என்ற அறக்கட்டளையை நான் நடத்தி வருகிறேன். அதன் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். இதற்கும் சினேகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டும் என்றே என்னை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார். போலி புகார் மூலம் என்னை புண்படுத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இருதரப்பிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காவல் ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜெயலட்சுமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது தரப்பு விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் அளித்துள்ளேன். சினேகன் புகார் அளித்து விட்டு அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. சினேகனுடன் சமாதானமாக செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்துகின்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சினேகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சினேகன் மீது நீதிமன்றத்தில் மனநஷ்ட வழக்கு தொடர்வேன். இவ்வாறு ஜெயலட்சுமி கூறினார்.