எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

கன்னடத்தில் துருவ் சார்ஜா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள கேடி - தி டெவில் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்தபோது அதில் பேசிய சஞ்சய் தத், “லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனக்கு ஒரு பெரிய கதாபாத்திரம் தரவில்லை என்கிற கோபம் அவர் மீது உண்டு. அவர் என்னை வீணாக்கி விட்டார்” என்று பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “மீடியாவில் இப்படி செய்தி பரவியதும் உடனடியாக சஞ்சய் தத் என்னை தொடர்பு கொண்டார். நான் ஜாலியான முறையில் ஒரு விஷயத்தை சொன்னேன். ஆனால் அதை வெட்டி ரொம்பவே மோசமான ஒரு விஷயமாக மாற்றி விட்டார்கள். நான் அந்த மாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை லோகேஷ் என்று என்னிடம் கூறினார்.
நான் ஒன்றும் இந்த உலகத்தில் மிகப்பெரிய அறிவாளியோ அல்லது மிகச்சிறந்த இயக்குனரோ இல்லை. நானும் சில தவறுகள் என்னுடைய படங்களில் செய்து இருக்கிறேன். அதில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். சஞ்சய் தத் சாரை வைத்து ஒரு மிகச்சிறந்த படம் ஒன்றை நிச்சயம் செய்வேன்” என்று கூறியுள்ளார்.