ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2010ம் ஆண்டு வெளியான படம் மதராசபட்டினம். ஏ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படம் ஆங்கிலேயர் காலத்து கதை. அதனால் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க லண்டனின் இருந்து அழைத்து வரப்பட்ட மாடல் அழகி மற்றும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எமி ஜாக்சன். ஆங்கிலேயே பெண் என்பதால் இந்த ஒரு படத்துடன் லண்டனுக்கே திரும்பி சென்று விடுவார் என்று கருதப்பட்ட நிலையில் அடுத்த படமே பாலிவுட் படமாக அமைந்தது. அந்த படம் ஏக் தீவானா தா. அதன் பிறகு பாலிவுட்டில் பிசியான நடிகை ஆனார். ஆங்கிலேயே பெண்ணாக இருந்தாலும் ஓரளவுக்கு தென்னிந்திய பெண்ணின் சாயல் இருந்ததால் தாண்டவம், தெறி, தங்கமகன், கெத்து, தேவி படங்களில் நடித்தார். கடைசியாக 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடித்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
அதன்பிறகு லண்டனுக்கு சென்றவர் திரும்பவே இல்லை. அங்கு காதலுடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயும் ஆனார். இப்போது அந்த காதலனையும் கழற்றி விட்டுவிட்டு புதிய காதலனோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வருகிறார். மதராசபட்டினத்திற்கு முதன் முதலாக அழைத்து வந்த அதே ஏ.எல்.விஜய், அவர் அடுத்து இயக்கும் படத்தில் எமிதான் நாயகி. அருண் விஜய் நாயகனான நடிக்கிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.