பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

2010ம் ஆண்டு வெளியான படம் மதராசபட்டினம். ஏ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படம் ஆங்கிலேயர் காலத்து கதை. அதனால் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க லண்டனின் இருந்து அழைத்து வரப்பட்ட மாடல் அழகி மற்றும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எமி ஜாக்சன். ஆங்கிலேயே பெண் என்பதால் இந்த ஒரு படத்துடன் லண்டனுக்கே திரும்பி சென்று விடுவார் என்று கருதப்பட்ட நிலையில் அடுத்த படமே பாலிவுட் படமாக அமைந்தது. அந்த படம் ஏக் தீவானா தா. அதன் பிறகு பாலிவுட்டில் பிசியான நடிகை ஆனார். ஆங்கிலேயே பெண்ணாக இருந்தாலும் ஓரளவுக்கு தென்னிந்திய பெண்ணின் சாயல் இருந்ததால் தாண்டவம், தெறி, தங்கமகன், கெத்து, தேவி படங்களில் நடித்தார். கடைசியாக 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடித்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
அதன்பிறகு லண்டனுக்கு சென்றவர் திரும்பவே இல்லை. அங்கு காதலுடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயும் ஆனார். இப்போது அந்த காதலனையும் கழற்றி விட்டுவிட்டு புதிய காதலனோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வருகிறார். மதராசபட்டினத்திற்கு முதன் முதலாக அழைத்து வந்த அதே ஏ.எல்.விஜய், அவர் அடுத்து இயக்கும் படத்தில் எமிதான் நாயகி. அருண் விஜய் நாயகனான நடிக்கிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.




