என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் ஈரம், மிருகம், யாகவராயினும் நாகாக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதே போல் ஜி.வி .பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணமாகி 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அதை கொண்டாடுவதற்காக பிரான்சில் உள்ள பாரிஸ் நகருக்கு ஆதியும், நிக்கி கல்ராணியும் சென்றுள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிக்கி கல்ராணி, நூறாவது திருமண நாளை காதல் நகரத்தில் சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.