தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் ஈரம், மிருகம், யாகவராயினும் நாகாக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஆதி. அதே போல் ஜி.வி .பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. ஆதியும், நிக்கி கல்ராணியும் யாகவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த மே மாதம் 18ம் தேதி சென்னையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தங்களுக்கு திருமணமாகி 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அதை கொண்டாடுவதற்காக பிரான்சில் உள்ள பாரிஸ் நகருக்கு ஆதியும், நிக்கி கல்ராணியும் சென்றுள்ளார்கள். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிக்கி கல்ராணி, நூறாவது திருமண நாளை காதல் நகரத்தில் சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.