ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். முதல் பாகம் அடுத்த மாதம் திரைக்கு வரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் சிம்பு ஒரு சாதாரண இளைஞராக இருந்து கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். இரண்டாம் பாகம் அந்த கேங்ஸ்டர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதையில் உருவாகிறது என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். அதோடு தற்போது பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.