டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நம் நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி அவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டிலேயே இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்கள்.
தனது சமூக வலைதளத்தில் தாங்கள் தேசிய கொடியை ஏந்தி நிற்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆடியோவையும் ஒலிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நாளை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடுவோம். ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சுதந்திரமான ஜனநாயக மற்றும் மகிழ்ச்சியான வீடு என்றால் நம்முடைய இந்திய நாடு தான் என்று அவர் ஒரு பதிவும் போட்டு உள்ளார்.