புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் ‛யோஹான் அத்தியாயம்' ஒன்று என்ற படத்தை இயக்க தயாரானார் கவுதம் மேனன். அந்தப் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்போவதாக அவர் அறிவித்தார். ஆனபோதிலும் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே படத்தின் மொத்த கதையையும் கவுதம் மேனன் தன்னிடத்தில் சொல்லாததால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய். அதன் காரணமாகவே யோஹான் அத்தியாயம் ஒன்று படம் அப்போதைக்கு கைவிடப்பட்டது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கமலஹாசன், அஜித் குமார், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி விட்ட கவுதம் மேனன், ரஜினி, விஜய் ஆகிய இருவரையும் வைத்து இதுவரை படம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் அவர் இணைந்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்க போகிறார்கள். ஏற்கனவே ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் தமிழ் நடிகர் அர்ஜுன், மலையாள நடிகர் பிருத்திவிராஜ் ஆகியோர் கமிட்டாகி உள்ள நிலையில் தற்போது கவுதம் மேனனும் இன்னொரு வில்லன் வேடத்தில் நடிக்க இப்படத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் விஜய்யுடன் இயக்குனராக இணைய முடியாத கவுதம் மேனன் இப்போது அவர் படத்தில் வில்லனாக இணைந்திருக்கிறார்.