இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ் பெற்ற பன்னாரி அம்மன் கோயிலுக்கு நடிகர் வடிவேலு திடீரென வருகை தந்தார். அங்கு அவர் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தார். கோவில் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. தரிசனம் முடிந்து வெளியில் வந்த வடிவேலுவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பொதுமக்கள் முண்டி அடித்தனர். அப்போது வடிவேலு கோயில் துப்புரவு பணியாளர்களை அருகே அழைத்து அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். மைசூரு வனப் பகுதியில் நடக்கும் படப்பிடிப்புக்காக திம்மம் மலைப்பாதை வழியாக சென்றபோது பண்ணாரி அம்மனை தரிசிக்க விரும்பி வந்ததாகவும் அவர் கூறினார்.