டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

திருச்சி : திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி 4 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.
திருச்சியில், 47வது மாநில அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி, கடந்த 24ம் தேதி முதல், கே.க.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி, மாஸ்டர் பிரிவில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதளத்திலும், பிஸ்டல் வகை போட்டிகளில், நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டு, இலக்கை நோக்கி சுட்டார்.

இதில், நடிகர் அஜித் குமார் அணி சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவு, ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் பிரிவு, 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிஸ்டல் ஆண்கள் பிரிவு, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் பிரிவு ஆகியவற்றில் வெண்கல பதக்கமும் என 6 பதக்கங்களை வென்றது.
அஜித்குமார் உட்பட மூன்று பேர் கலந்த கொண்ட போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் பதக்கங்களை வென்று உள்ளதாக, ரைபிள் கிளப் தரப்பில் தெரிவித்தனர். இதற்கான பரிசளிப்பு விழா நாளை (31ம் தேதி) நடைபெற உள்ளது.




