பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தற்போது இயக்கி வரும் பான்--இந்தியா படம் 'புராஜக்ட் கே'. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஹிந்தி, தெலுங்கில் தயாராகி வரும் இப்படம் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி தத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜுலை மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமானது. தொடர்ந்து சீரான இடைவெளியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டில்தான் முடிவடைய உள்ளது. அந்த வருடத்திலேயே இறுதிக் கட்டப் பணிகளை ஆரம்பித்து 2024ல் முடிக்க உள்ளார்களாம். சுமார் 10 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.