'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான பாசத்தை மையமாக வைத்து சென்டிமென்ட்டாக உருவான ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் குஞ்சாகோ போபன் நடிப்பில் உருவாகி வரும் 'நின்ன தான் கேஸ் கொடு' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழ் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
39 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான காதோடு காதோரம் என்கிற படத்தில் இடம்பெற்ற தேவதூதர் பாடி என்கிற பாடலை இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் பாடுவது போல ரீ கிரியேட் செய்து உள்ளார் இயக்குனர் ரதிஷ் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த பாடல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த பாடலை வெளியிட்ட நடிகர் மம்முட்டி, “37 வருடங்களுக்கு முன் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட இந்த பாடலை தற்போது நின்னதான் கேஸ் கொடு என்கிற படத்திற்காக ரீ கிரியேட் செய்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அன்பான குஞ்சாக்கோ போபன் மற்றும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இதன் ஒரிஜினல் பாடலை கே.ஜே ஜேசுதாஸ் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.