'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல விருதுகளும் அங்கீகாரமும் பெற்றது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு கூட இந்தப் படம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரை நடிகர் தனுஷ் வாழ்த்தி உள்ளார்.
தனுஷ் கூறுகையில், ‛‛தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் நண்பர் ஜி.வி.பிரகாஷிற்கு ஆகியோருக்கு... தமிழ் சினிமாவிற்கு இன்று பெரிய நாள். பெருமையாக உள்ளது'' என்றார்.