பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! |
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரிக்க, சாம் இசையமைத்து வருகிறார். பகாசூரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் சிவன் பாடலுக்கு செல்வராகவன் முதன் முதலாக நடனம் ஆடியுள்ளார். இதற்காக உரிய பயிற்சி பெற்று நடனம் அடி உள்ளார் செல்வராகவன்.
டப்பிங் ஆரம்பம்
இது ஒருபுறம் இருக்க செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது . தற்போது இந்த படத்தின் மற்ற பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் ட்ரைலர் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை செல்வராகவன் தொடங்கியுள்ளார். அவர் நடித்த காட்சிகளுக்காக டப்பிங் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். செப்., 30ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது.