டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழில் அதிகப் படங்களில் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அடுத்தடுத்து, “இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு 'கோப்ரா' பட இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் பாடல்களை நேரடி இசை நிகழ்ச்சியாக மேடையில் தனது குழுவினர்களுடன் வழங்கினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அந்த விழாவை நின்று கொண்டே ரசித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் விடியற்காலையில் தனது சமூக வலைத்தளங்களில் திடீரென ஒரு புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அதை எதற்காகப் பதிவிட்டார் என்பதும் தெரியவில்லை. தமிழ்த் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் அது. அவர்களது பெயரை மட்டும் குறிப்பிட்டு அந்தப் புகைப்படைத்தைப் பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நான்கு இசை மேதைகள் உள்ள அந்த புகைப்படம் ஒரு பொக்கிஷம் என ரசிகர்கள் பலரும் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்பது சமூக வலைத்தளங்களில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.