காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழில் அதிகப் படங்களில் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அடுத்தடுத்து, “இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு 'கோப்ரா' பட இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் பாடல்களை நேரடி இசை நிகழ்ச்சியாக மேடையில் தனது குழுவினர்களுடன் வழங்கினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அந்த விழாவை நின்று கொண்டே ரசித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் விடியற்காலையில் தனது சமூக வலைத்தளங்களில் திடீரென ஒரு புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அதை எதற்காகப் பதிவிட்டார் என்பதும் தெரியவில்லை. தமிழ்த் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் அது. அவர்களது பெயரை மட்டும் குறிப்பிட்டு அந்தப் புகைப்படைத்தைப் பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நான்கு இசை மேதைகள் உள்ள அந்த புகைப்படம் ஒரு பொக்கிஷம் என ரசிகர்கள் பலரும் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்பது சமூக வலைத்தளங்களில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.




