'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமாரின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் சவுந்தர்ராஜா. அதன் பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பர், வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்தார் 'ஒரு கனவு போல', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படங்களில் ஹீரோவாக நடித்த சவுந்தர்ராஜா சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‛சாயாவனம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதனை மலையாள இயக்குனர் அனில் இயக்குகிறார். இந்தப் படத்தை தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். தேவானந்தா, அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எல் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பொலி வர்கீஸ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் அனில் கூறியதாவது: சாயாவனம் என்றால் அடர்ந்த காடு என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன. என்கிறார் அனில்.