ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமாரின் நண்பனாக நடித்து புகழ்பெற்றவர் சவுந்தர்ராஜா. அதன் பிறகு பல படங்களில் ஹீரோவுக்கு நண்பர், வில்லன் கேரக்டர்களில் நடித்து வந்தார் 'ஒரு கனவு போல', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படங்களில் ஹீரோவாக நடித்த சவுந்தர்ராஜா சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‛சாயாவனம்' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இதனை மலையாள இயக்குனர் அனில் இயக்குகிறார். இந்தப் படத்தை தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார். தேவானந்தா, அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எல் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பொலி வர்கீஸ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் அனில் கூறியதாவது: சாயாவனம் என்றால் அடர்ந்த காடு என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன். படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன. என்கிறார் அனில்.