கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவில் பல சமூக சிந்தனை படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அவரது ஒரே மகன் விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சந்திரசேகர் நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது மனைவி ஷோபாவுடன் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. வயதான காலத்தில் இருவர் மட்டும் தனியாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள், நடிகைகள் பிறந்தநாள் கொண்டிய போது அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய், தன்னுடைய அப்பா பிறந்தநாளுக்குக் கூட வரவில்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். விஜய் வெளியூரில் படப்பிடிப்பில இருந்தால் கூட அப்பாவின் மகிழ்ச்சிக்காக வந்திருக்க வேண்டுமல்லவா என்றும் சொல்கிறார்கள். விஜய்க்கும் அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை என்ற ஒரு தகவலும் திரையுலகத்தில் உள்ளது.