சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ் சினிமாவில் பல சமூக சிந்தனை படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர். அவரது ஒரே மகன் விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சந்திரசேகர் நேற்று தன்னுடைய 81வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது மனைவி ஷோபாவுடன் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. வயதான காலத்தில் இருவர் மட்டும் தனியாக பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
படப்பிடிப்பில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்கள், நடிகைகள் பிறந்தநாள் கொண்டிய போது அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய விஜய், தன்னுடைய அப்பா பிறந்தநாளுக்குக் கூட வரவில்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளார்கள். விஜய் வெளியூரில் படப்பிடிப்பில இருந்தால் கூட அப்பாவின் மகிழ்ச்சிக்காக வந்திருக்க வேண்டுமல்லவா என்றும் சொல்கிறார்கள். விஜய்க்கும் அவருடைய அப்பா சந்திரசேகருக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை என்ற ஒரு தகவலும் திரையுலகத்தில் உள்ளது.