2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் |
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜூலை 1) திரைக்கு வரும் இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறுகிறார். மேலும் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய வேல் படத்தில் அசின், சிங்கம் படத்தில் அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரம் எப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோ அதேபோன்று யானை படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு இந்த படத்தில் ஒரு நல்ல கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு கிராமத்து கதாபாத்திரம் என்றால் பிரியா பவானி சங்கர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லும் அளவுக்கு எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என்று கூறும் பிரியா பவானி சங்கர், யானை படம் ஒரு நல்ல குடும்ப பாங்கான படத்தில் நடித்த திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.