நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் |
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜூலை 1) திரைக்கு வரும் இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறுகிறார். மேலும் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய வேல் படத்தில் அசின், சிங்கம் படத்தில் அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரம் எப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோ அதேபோன்று யானை படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு இந்த படத்தில் ஒரு நல்ல கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு கிராமத்து கதாபாத்திரம் என்றால் பிரியா பவானி சங்கர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லும் அளவுக்கு எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என்று கூறும் பிரியா பவானி சங்கர், யானை படம் ஒரு நல்ல குடும்ப பாங்கான படத்தில் நடித்த திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.