இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் என பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜூலை 1) திரைக்கு வரும் இந்த படம் தனக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என்று கூறுகிறார். மேலும் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய வேல் படத்தில் அசின், சிங்கம் படத்தில் அனுஷ்கா ஆகியோரின் கதாபாத்திரம் எப்படி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோ அதேபோன்று யானை படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு இந்த படத்தில் ஒரு நல்ல கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனது திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு கிராமத்து கதாபாத்திரம் என்றால் பிரியா பவானி சங்கர் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று சொல்லும் அளவுக்கு எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது என்று கூறும் பிரியா பவானி சங்கர், யானை படம் ஒரு நல்ல குடும்ப பாங்கான படத்தில் நடித்த திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார்.