ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
ஸ்டூடியோக கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படம் தோல்வியை தழுவியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்ட சம்பளம் தரப்படவில்லை. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தனது தரப்பு விளக்கத்தையும் கோர்ட்டில் முன் வைத்தார் ஞானவேல்ராஜா.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஞானவேல்ராஜா கூறியிருப்பதாவது: மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை பேசியிருந்தோம். எனக்கு அந்த சமயத்தில் பணப்பிரச்சினை இருந்தது. அதனால் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த உறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவரும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து வழக்கு தொடர்ந்து விட்டார்.
அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தில் 30 முதல் 40 சதவீதத்தை ஏற்கெனவே கொடுத்து விட்டோம். மீதியை இப்போது அவருக்குக் கொடுத்து வருகிறோம். ஆரம்பத்தில் எனக்கும் அவர் மீது கோபம் இருந்தது. அவருக்கு சேரவேண்டிய பணத்தைத்தானே கேட்கிறார் என்று நினைத்து அமைதியாகிவிட்டேன். இது விஷயமாக சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை. வருங்காலத்தில் அவராக தேதி கொடுத்தால் அவரை வைத்து படம் எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.