சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஸ்டூடியோக கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படம் தோல்வியை தழுவியது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்ட சம்பளம் தரப்படவில்லை. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார். பதிலுக்கு தனது தரப்பு விளக்கத்தையும் கோர்ட்டில் முன் வைத்தார் ஞானவேல்ராஜா.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஞானவேல்ராஜா கூறியிருப்பதாவது: மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என ஒரு குறிப்பிட்ட தொகை பேசியிருந்தோம். எனக்கு அந்த சமயத்தில் பணப்பிரச்சினை இருந்தது. அதனால் அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த உறுதியை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அவரும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து வழக்கு தொடர்ந்து விட்டார்.
அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தில் 30 முதல் 40 சதவீதத்தை ஏற்கெனவே கொடுத்து விட்டோம். மீதியை இப்போது அவருக்குக் கொடுத்து வருகிறோம். ஆரம்பத்தில் எனக்கும் அவர் மீது கோபம் இருந்தது. அவருக்கு சேரவேண்டிய பணத்தைத்தானே கேட்கிறார் என்று நினைத்து அமைதியாகிவிட்டேன். இது விஷயமாக சிவகார்த்திகேயனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை. வருங்காலத்தில் அவராக தேதி கொடுத்தால் அவரை வைத்து படம் எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.




