ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த 2012ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அதையடுத்து ஹீரோயின் - வில்லி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛என்னிடத்தில் சிலர், நீங்கள் எதற்காக ராதிகாவை அம்மா என்று கூப்பிடுவதில்லை என்று கேட்கிறார்கள். நான் எதற்காக அவரை அம்மா என்று கூப்பிட வேண்டும். அவர் என் அப்பாவோட இரண்டாவது மனைவி அவ்வளவுதான். அதோடு நான் ராதிகா மீது கோபத்தில் இருப்பதாகவும் எங்களுக்குள் ஒரு சரியான பேச்சுவார்த்தை இல்லை என்பது போலவும் செய்திகள் வெளியாகிறது. ஆனால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருக்கிறது. மேலும் என்னுடைய அம்மாவைதான் நான் அம்மா என்று கூப்பிட முடியும். ஒருவர் தான் ஒருவருக்கு அம்மாவாக இருக்க முடியும். சோசியல் மீடியாவில் யாராவது வம்பு இழுக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.