மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழகத்தில் விஸ்வரூபம் படம் தடை செய்யப்பட்டுள்ளதால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கும் விஸ்வரூபம் படக்குழுவுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக, இணையதளங்களில் விஸ்வரூபம் படம் திருட்டுதனமாக வெளியாகியுள்ளது. கமல் இயக்கி, நடித்து, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்திற்கு தொடர் பிரச்னைகள் எழுந்து கொண்டே இருக்கிறது. டி.டி.எச். ரிலீசால் தியேட்டர் அதிபர்களுடன் மோதல், பின்னர் அந்த பிரச்னை தீர்ந்து ஜன 25ம் தேதி ரிலீஸாகும் நேரத்தில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக சொல்லி முஸ்லிம் அமைப்பினரின் எதிர்ப்பு, இதனால் இப்படத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளது தமிழக அரசு. இதனால் மிகவும் மனமுடைந்துள்ளார் கமல். அமெரிக்காவில் விஸ்வரூபம் படத்தை திரையிடுவதற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் சென்ற கமல், அங்கிருந்தபடியே தனது வேதனைகளை அறிக்கையாகவும், பேட்டியாகவும் கொடுத்தார். அதேசமயம் கமலுக்கு ஆதரவாக திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும், ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க இப்போது இன்னொரு பிரச்னை விஸ்வரூபமாக எடுத்துள்ளது கமலின் விஸ்வரூபத்திற்கு. கேரளா, கர்நாடகா, ஆந்திரா தவிர தமிழகம் மற்றும் புதுவையில் இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. ஆனால் அதற்குள் இப்படம் திருட்டுதனமாக இணையதளங்களில் உலா வர ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து இதை தடுக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் வெளிநாடுகளில் இருந்து திருட்டுதனமாக இப்படம் இணையதளங்களில் அப்லோடு செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்று இணையதளங்களில் படம் வெளிவராமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.