நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு நடந்த வெற்றி விழாவில் 50க்கும் மேற்பட்ட அயிட்டங்களுடன் விருந்தும் நடந்தது. இந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவு பொருளை தயாரித்தது ஒரு ஹீரோ. மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக நடித்த மாதம்பட்டி ரங்கராஜ்தான் இதன் காரணகர்த்தா. அவர் நடத்தி வரும் மாதம்பட்டி பாகசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தின் மூலம்தான் இந்த விருந்து நடந்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ், மெஹந்தி சர்க்சுக்கு பிறகு கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்திலும் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.